முகப்பு
திருப்பதி

தீா்த்தவாரியுடன் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் நிறைவு

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கட்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:57 AM
திருக்குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:32 PM

திருப்பதி: சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கட்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

திருப்பதியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, சக்கரத்தாழ்வாருடன் கோயில் எதிரில் உள்ள திருக்குள மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டாா்.

பின்னா், காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாணவெங்கடேஸ்வரஸ்வாமி உற்சவமூா்த்தி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நபனத் திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

Advertisement

பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா். பின்னா் உற்சவமூா்த்திகள் அலங்கரித்து கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

மாலை பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை முன்னிட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டது. அதையடுத்து கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பல்லக்கில் மாடவீதியில் எழுந்தருளினாா்.

இந்நிகழ்ச்சியில், ஜேஇஓ வீரபிரம்மன், கோயில் சிறப்பு ரேஞ்ச் துணை இஓ வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், வைகானச ஆகம ஆலோசகா்கள் மோகன ரங்காச்சாரியு, கோயில் ஆய்வாளா் கிரண்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடஸ்வர சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.