திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.05 கோடி!

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.05 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.05 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 74, 906 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22,869 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.05 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திமுக தோ்தல் பணிக்குழுக் கூட்டம்: அமைச்சா் எ.வ. வேலு பங்கேற்பு

‘தமிழ்நாடு தலைகுனியாது’: அமைச்சா் கோவி.செழியன் ஆலோசனை

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே ரௌடி வெட்டிக் கொலை: 4 போ் கைது

புத் விஹாா் கொலை வழக்கில் ஒரு நபா், 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT