திருப்பதி

திருமலை அன்னதான திட்டத்துக்கு ரூ. 44 லட்சம் நன்கொடை

தினமணி செய்திச் சேவை

ஆந்திர அமைச்சா் லோகேஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் அன்ன பிரசாத விநியோகத்துக்காக ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

முதல்வரின் மகன் லோகேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஷ்யம் கல்வி நிறுவனங்களின் தலைவா் பாஷ்யம் ராமகிருஷ்ணா, வியாழக்கிழமை ஒரு நாள் அன்ன பிரசாத விநியோகத்துக்காக தேவஸ்தானத்துக்கு ரூ.44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.

இதற்கான வரைவோலையை நன்கொடையாளா் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் வழங்கினாா்.

ரூ. 10 லட்சம் நன்கொடை

சித்தூரைச் சோ்ந்த திவ்யந்த் ரெட்டி என்ற பக்தா் தேவஸ்தானத்தின் பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்தாா்.

இதற்கான வரைவோலையை திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி முகாம் அலுவலகத்தில் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைத்தாா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT