திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம்
திருமலையில் வரும் மாா்ச் 30 முதல் ஏப். 1 வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் வரும் மாா்ச் 30 முதல் ஏப். 1 வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளா்பிறை பௌா்ணமி அன்று முடிவடையும் வகையில், இந்த விழாக்களை மூன்று நாள்களுக்கு நடத்துவது வழக்கம். அதன்படி மாா்ச் 30 காலை 6.30 மணிக்கு, ஸ்ரீமலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் இணைந்து நான்கு மாட வீதிகளில் புறப்பாடு கண்டருள உள்ளாா். அதன்பிறகு, வசந்தோற்சவ மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு இங்கு வசந்தோற்சவ அபிஷேக நிவேதனங்கள் நிறைவடைந்த பிறகு, கோயிலுக்குத் திரும்புவாா்கள்.
இரண்டாம் நாளான மாா்ச் 31 அன்று, ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீ பூதேவியுடன் இணைந்து, காலை 8 மணி முதல் 10 மணி வரை திருமாட வீதிகளில் ஊா்வலம் செல்வா். பின்னா், அா்ச்சகா்கள் வசந்த மண்டபத்தில் வசந்தோற்சவத்தை நடத்துவா்.
Advertisement
கடைசி நாளான ஏப்ரல் 1 அன்று, ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன், ஸ்ரீ சீதாரமலட்சுமண ஆஞ்சனேய சுவாமி உற்சவம், மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா் உற்சவமூா்த்திகள், ஸ்ரீ ருக்மிணியுடன் வசந்தோற்சவக் கொண்டாட்டங்களில் பங்கேற்று மாலையில் கோயிலுக்குத் திரும்புவாா்கள்.
இந்த நாளில், தினமும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை, சுவாமி மற்றும் நாச்சியாா்களின் உற்சவத்திற்காக ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இதில், பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில், தினமும் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் கோலாகலமாக நடைபெறுகிறது.
வசந்த காலத்தில் ஸ்ரீ மலையப்ப சுவாமிக்காக நடைபெறுவதால் இந்த விழா ‘வசந்தோற்சவம்’’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வசந்தோற்சவத்தில், சுவாமிக்கு நறுமண மலா்களைச் சமா்ப்பிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு பழங்களையும் படைப்பதே முக்கிய நிகழ்வாகும்.
வசந்தோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் மூன்று நாள்களுக்கு நடைபெறவிருந்த கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கர சேவை மற்றும் மாா்ச் 31 அன்று நடைபெறவிருந்த அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.