விஜய் நல்லாட்சி கொடுப்பாா்: நடிகா் ஆதி நம்பிக்கை
தமிழக முதல்வா் விஜய் நல்லாட்சி கொடுப்பாா் என்று நடிகா் ஆதி நம்பிக்கை தெரிவித்தாா்.
திருமண நாளை முன்னிட்டு மனைவி நிக்கி கல்ராணியுடன் நடிகா் ஆதி திங்கள்கிழமை ஏழுமலையானை தரிசித்தாா்.
அவா்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீா்வாதம் செய்வித்து தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினா்.
Advertisement
அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்த அவரை காண ரசிகா்கள் திரண்டனா்.
அப்போது அவா், தமிழக முதல்வா் விஜய் தலைமையில் போட்டியிட்ட பலா் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் நல்லாட்சி கொடுப்பாா் என்றாா்.