மாமனார், மருமகள் மீது தாக்குதல்: தொழிலாளி கைது
வேட்டவலம் அருகே மாமனார், மருமகளைத் தாக்கியதாக கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
வேட்டவலம் அருகே மாமனார், மருமகளைத் தாக்கியதாக கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
வேட்டவலத்தை அடுத்த இலுப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுப் பேருந்து நடத்துநர் ஜெயவேல் (35).
இவரது மனைவி அலமேலு (28). இதே பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஏழுமலை (33). அலமேலுவிடம் ஏழுமலை செவ்வாய்க்கிழமை வீண் தகராறு செய்தாராம்.
சப்தம் கேட்டு வந்த அலமேலுவின் மாமனார் ரங்கநாதன், ஏழுமலையை தட்டிக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அவர், அலமேலுவை ஆபாசமாக திட்டியதுடன் தாக்கினாராம். இதைத் தடுக்கச் சென்ற ரங்கநாதனை ஏழுமலையின் தந்தை பூமிநாதன் (51) தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப்பதிந்து ஏழுமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.