திருவண்ணாமலை

மரம் வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

செய்யாறு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், மரம் வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செய்யாறில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கே.ஏ.சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின்போது, கோ கிரீன் தலைவர் எஸ்.ஏ.அன்வர்பெய்க் முன்னிலையில்,  101 மரக்கன்றுகளை திரைப்பட நடிகரும், இயக்குநருமான ஆர்.பாண்டியராஜன், விழாவில் பங்கேற்றோருக்கு வழங்கினார்.
மேலும், மரங்களை வளர்ப்பதால் மனிதர்களுக்கும், நாட்டுக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர் பேசினார். நிகழ்ச்சியில் ரோட்டரி செயலர் எஸ்.கருப்பையா, முன்னாள் தலைவர் பி.எஸ்.ஏகாம்பரம் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிரிக்கலாம் வாங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT