செங்கம் அருகேயுள்ள புதுப்பாளையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. பேரணியை புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி தொடக்கி வைதத்தார்.
பேரணியில் புதுப்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். பேரணி புதுப்பாளையம் பேரூராட்சி வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது.