திருவண்ணாமலை

வந்தவாசி கவிஞருக்கு இலக்கிய விருது

DIN

சென்னை கவிமுகில் அறக்கட்டளை சார்பில், சென்னை மைலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற விழாவில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷுக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டது.
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய தலைகீழாகப் பார்க்கிறது வானம் என்ற ஹைக்கூ கவிதை நூலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் வேளாண் துறை முன்னாள் இயக்குநர் மு.ராஜேந்திரன் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் பணமுடிப்பை கவிஞர் மு.முருகேஷிடம் வழங்கினார்.
கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன், கவிமுகில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT