முகப்பு
திருவண்ணாமலை

முழு மது விலக்கு கோரி மதிமுக பேரணி

தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி, திருவண்ணாமலையில் மதிமுகவினர் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:17 AM
பகிர்:

தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி, திருவண்ணாமலையில் மதிமுகவினர் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.
திருவண்ணாமலை, பெரியார் சிலை எதிரில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.ராஜா பேரணியை தொடக்கி வைத்தார். அண்ணா சிலை, காந்தி சிலை, திருவூடல் தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி காமராஜர் சிலை எதிரே நிறைவடைந்தது. பேரணியில், இலங்கைத் தமிழர் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசிடம் ஐ.நா. விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஐ.நா. மன்ற 24-ஆவது அமர்வில் நடக்கும் ஓட்டெடுப்பில் இலங்கைக்குக் எதிராக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாசறை பாபு, மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →