முகப்பு
செய்திகள்

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:03 PM
நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
பகிர்:

மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு ம்னு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2017-இல் பிரபல மலையாள நடிகை பாலியல் வழக்கிலிருந்து இன்று(டிச. 8) விடுதலை செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் எர்ணாகுளம் நீதிமன்றத்தால் கடந்தாண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார்.

நடிகை மீதான பாலியல் அத்துமீறல் குற்ற வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்ட ஏ1 முதல் ஏ 6 வரை குற்றவாளிகள் என்றும், ஏ8-ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்த திலீப்புக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் டிச. 8, 2025-இல் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப். 27) மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், இவ்வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிகப்பட்டுள்ள பல்சர் சுனி (சுனில்), மார்ட்டின் அந்தோணி, பி. மணிகண்டன், விஜேஷ் வி பி, எச். சலீம், பிரதீப் ஆகிய 6 பேருக்கும் கடுந்தண்டனை விதிக்கவும் கோரப்பட்டுள்ளது.

திலீப் மட்டுமில்லாது, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சார்லி தாமஸ், சனில் குமார் (மேஸ்திரி சனில்) மற்றும் சரத் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களது விடுதலையையும் எதிர்த்து தீர்ப்பை மறு ஆய்வு செய்யவும் விசாரிக்க மேல்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.

summary

Kerala govt files appeal in 2017 actress assault case against actor Dileep's acquittal

முழு கட்டுரையைப் படிக்க →