வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்!
ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்ட வெல்லமண்டி என். நடராஜன் அதிமுகவில் மீண்டும் இணைந்திருப்பது பற்றி...
வெல்லமண்டி என். நடராஜன் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்கியபோது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான வெல்லமண்டி என். நடராஜனும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் ஐக்கியமானார். இன்று (பிப். 27) தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினைச் சந்தித்து அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
இதனையடுத்து, அவரது சர்பு நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்த நிலையில், வெல்லமண்டி என். நடராஜன் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்து அவர் தன்னை மீண்டும் அக்கட்சியில் இன்று (பிப். 27) இணைத்துக்கொண்டார்.
அதிமுக-வில் மாவட்டச் செயலராக 5 முறையும், அவைத் தலைவராக 16 ஆண்டுகளும் இருந்தவர் வெல்லமண்டி என். நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.