முகப்பு
திருவண்ணாமலை

903 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கினார்

செய்யாறில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 903 மாணவர்களுக்கு ரூ.1.11 கோடியிலான விலையில்லா மடிக்கணினிகளை இந்து

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

செய்யாறில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 903 மாணவர்களுக்கு ரூ.1.11 கோடியிலான விலையில்லா மடிக்கணினிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினார்.
செய்யாறில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் வி.ராஜசேகரன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, 903 மாணவ, மாணவிகளுக்கு ரூ1.11 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மின் விளக்குகளை சீரமைக்க நிதியுதவி: செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, விழா நடைபெற்ற இடத்தில் சில குழல் விளக்குகள் (டியூப் லைட்டுகள்) எரியாமல் இருந்ததால் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து, குழல் விளக்குகளை சீரமைக்க அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கரலிங்கத்திடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் பெ.கிருபானந்தம், வட்டாட்சியர் மகேந்திரமணி, தலைமை ஆசிரியர்கள் பெண்கள் பள்ளி உமாமகேஸ்வரி, ஆண்கள் பள்ளி என்.ஆர்.சங்கரலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்
எஸ்.ரவிச்சந்திரன், பி.லோகநாதன், செய்யாறு கூட்டுறவு பால் வழங்கும் சங்கத் தலைவர் அ.அருணகிரி, அதிமுக மாணவரணி
எம்.மகேந்திரன், அவைத்தலைவர் டி.பி.துரை, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் எஸ்.திருமூலன், முன்னாள் சேர்மன் பொன்.அருளானந்தன், வழக்குரைஞரணி முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →