திருவண்ணாமலை

ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள் விழா

DIN

சேத்துப்பட்டை அடுத்த சனிக்கவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்ஏழுமலை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆறுமுகம் கலந்து கொண்டு, முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கதை, கவிதை, பாடல், நடனம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பட்டதாரி ஆசிரியர் விஜய்பாபு உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT