திருவண்ணாமலை

இரு சக்கர வாகனங்கள் மோதல்: ஒருவர் சாவு

DIN

வந்தவாசி  அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (56). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகன் சிங்காரகுமாருடன் (15) வந்தவாசிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, தாழம்பள்ளம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45) என்பவர் இரு சக்கர வாகனத்தில் உள் சாலையிலிருந்து பிரதான சாலையில் திரும்பியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய 2 இரு சக்கர வாகனங்களும் மோதிக் கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி, சிங்காரகுமார், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT