திருவண்ணாமலை

மேசைப்பந்து, கையுந்துபந்து போட்டிகள்: திருவண்ணாமலை கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

DIN

வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான மேசைப்பந்து, கையுந்துபந்து போட்டிகளில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனர்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான கல்லூரி மாணவிகளுக்கான மேசைப்பந்து, கையுந்துபந்து போட்டிகள் நடத்தப்பட்டன. கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு மேசைப்பந்து, கையுந்துபந்து போட்டிகளில் இரண்டாமிடம் பிடித்தனர்.
இதில், கல்லூரியின் கணிதத் துறை மூன்றாம் ஆண்டு மாணவி கே.அஸ்வினி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மேசைப்பந்து அணிக்கும், எம்.காம் இரண்டாம் ஆண்டு மாணவி இ.சாரதா திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கையுந்துபந்து அணிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், கேரள மாநிலம் கன்னூர் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடைபெறும் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மேசைப்பந்து, கையுந்துபந்து போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் வென்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கே.ராஜேந்திரகுமார், அறக்கட்டளை உறுப்பினர்கள் டி.ஏ.எஸ்.முத்து, சி.சக்திகுமார், கல்வி புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ், உடற்கல்வி இயக்குநர்கள் எம்.கோபி, ஆர்.மீரா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் புதன்கிழமை பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT