திருவண்ணாமலை

மாநில கோ - கோ போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு

DIN

மாநில அளவிலான கோ - கோ போட்டியில் விளையாட திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வேலூர் மண்டல அளவிலான கோ - கோ விளையாட்டுப் போட்டி வேலூரில் அண்மையில் நடைபெற்றது. இதில், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் மண்டல அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.காயத்ரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம், ஒன்றியக் கவுன்சிலர் பழனி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அய்யாக்கண்ணு, உடற்கல்வி ஆசிரியர்கள் பி.ராமமூர்த்தி, முனியப்பன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT