திருவண்ணாமலை

மியான்மர் அரசைக் கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

மியான்மர் அரசு இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வதாகக் கூறியும், அந்த நாட்டு அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருவண்ணாமலையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.ஷாகித் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.அமீன், துணைச் செயலர் ஜி.அப்துல் மவ்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் என். நபிஜான் வரவேற்றார்.
பேச்சாளர் குல்ஜார் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மியான்மர் அரசு இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்து வருவதாகக் கூறியும், அந்த நாட்டு அரசைக் கண்டித்தும் பேசினார். இதில், திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளைத் தலைவர் ஹயாத், பொருளாளர் அப்துல் ரஹ்மான், அண்ணா நகர் கிளைத் தலைவர் இஸ்மாயில், புதுத்தெரு கிளைத் தலைவர் முஹம்மத் கவுஸ் உள்பட ஏராளமான ஆண், பெண்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT