மாவட்ட மைய நூலகத்தில் இலக்கியச் சந்திப்புக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் இலக்கியச் சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் இலக்கியச் சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகம், சென்னை வாசகச் சாலை அமைப்பு ஆகியவை இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தின.
நிகழ்ச்சிக்கு மைய நூலக நல் நூலகர் சாயிராம் தலைமை வகித்தார்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய "பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நாவல் குறித்து பேராசிரியர் வே.நெடுஞ்செழின் நூலாய்வு செய்து, சிறப்புரையாற்றினார்.
நூலாசிரியர் கதாபாத்திரங்களைக் கையாண்ட விதம், மொழி, இலக்கியம் நயம் என அனைத்தையும் பகுப்பாய்வு செய்து அவர் பேசினார். சென்னை வாசகச் சாலையின் மாரிசெல்வம், துரைபாண்டி, ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நல் நூலகர் திருச்செந்தில், நூலகர்கள் ஹேமா, பானு, நூலகப் பணியாளர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், வாசகர்கள், ஆய்வு மாணவர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சிறந்த நூல்கள், சிறந்த ஆளுமைகளுடன் "தென்றல்' என்ற பெயரில் இந்த இலக்கியச் சந்திப்புக் கூட்டம் நடைபெறும் என முதல் நிலை நூலகர் பெ.வள்ளி தெரிவித்தார்.