காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவண்ணாமலையில் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவண்ணாமலையில் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.செல்வம் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் பி.ஆனந்தன், இணைச் செயலர் சீனு, மாநில இளைஞரணிச் செயலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் ஏ.தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், மாவட்டச் செயலர் பி.சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.