திருவண்ணாமலை

அரசுப் பள்ளிக்கு ரூ.1.4 லட்சம் புரவலர் நிதி வசூல்

DIN

செங்கம் அருகே உள்ள பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 90 பேர் புரவலர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ. ஒரு லட்சத்து 4 ஆயிரம் நிதி வசூலிக்கப்பட்டது.
பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கண்ணதாசன் தலைமையில், ஆசிரியர்கள் குழு அமைத்து, பள்ளி புரவலர் திட்டத்துக்கு நிதி வசூலித்தனர்.
அதன்படி, 90 பேர் புரவலர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ. ஒரு லட்சத்து 4 ஆயிரம் நிதி வசூலிக்கப்பட்டது. 
பின்னர், அந்தப் பணம் பள்ளியின் வளர்ச்சிக்காக வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமாரை சந்தித்து, புரவலர் திட்ட வைப்புத்தொகை கணக்கு புத்தகத்தை பள்ளி நிர்வாகிகள் அளித்தனர்.
அப்போது, பள்ளித் தலைமை ஆசிரியர் கண்ணதாசன் தலைமையிலான ஆசிரியர் குழுவினருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பாராட்டுத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT