போளூரை அடுத்த குருவிமலை அரசு நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளி பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சியை போளூர் கல்வி மாவட்ட அலுவலர் கருணாகரன் ஆய்வு செய்தார்.
போளூரை அடுத்த குருவிமலை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளிப் பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சிக்காக கலசப்பாக்கம் ஒன்றியம், கேட்டவரம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர்.
மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியை ஆ.ஆஞ்சலா வரவேற்ரார்.
நிகழ்ச்சியில் போளூர் கல்வி மாவட்ட அலுவலர் கருணாகரன் கலந்துகொண்டு ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களிடம் கல்வி, பொது அறிவு குறித்த கேள்விகளை அவர் கேட்டார். பின்னர், மாணவர்களுக்கு ஒழுக்கம், கல்வி, பாதுகாப்பு குறித்து கருணாகரன் அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மோகன், கண்ணன், கேட்டவரம்பாளையம் ஆசிரியர்கள் ராஜேந்திரன், ஜெயந்தி, மீரா, ராதா, பிரஸில்லா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.