திருவண்ணாமலை

இந்து மக்கள் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை பிரசாரம் 

தினமணி

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் இந்து மக்கள் கட்சி சார்பில், அந்தக் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம்.ராமச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூர்ணசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் அசோக்குமார் வரவேற்றார்.
 சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாநில துணைத் தலைவர் சோமு.ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு, கட்சியின் கொள்கை விளக்க உரையாற்றினர்.
 இதில், கடலூர் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா, ஒன்றியத் தலைவர் சி.பழனி, ஒன்றியத் துணைத் தலைவர் எஸ்.கன்னியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT