முகப்பு
திருவண்ணாமலை

கள்ளச் சாராயம் விற்பனை: ஒருவர் கைது

போளூரில் உள்ள மோட்டலூர் ஏரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை கள்ளச் சாராயம் விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 21 மே, 2018 at 7:41 AM
பகிர்:

போளூரில் உள்ள மோட்டலூர் ஏரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை கள்ளச் சாராயம் விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
போளூர் மோட்டலூர் ஏரிக்கரையில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக போளூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது. அதனடிப்படையில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீஸார் மோட்டலூர் ஏரிக்கரைக்குச் சென்றார்.
அங்கு, போளூர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜேந்திரன்(47) கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக ராஜேந்திரனை கைது செய்த போலீஸார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 55 லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.