முகப்பு
திருவண்ணாமலை

பேரிடர் மீட்புப் பணி குறித்து விழிப்புணர்வு

போளூர் வட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு பேரிடர் மீட்புப் பணி குறித்து வருவாய்த் துறை சார்பில் சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 8 அக்டோபர் 2018, 9:37 am IST
பகிர்:

போளூர் வட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு பேரிடர் மீட்புப் பணி குறித்து வருவாய்த் துறை சார்பில் சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 போளூர் வட்டத்தைச் சேர்ந்த வசூர், மண்டகொளத்தூர், வம்பலூர் ஆகிய கிராமங்கள் செய்யாற்றின் மிக அருகில் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களுக்குள் திடீரென மழை வெள்ளம் புகுந்தால் அல்லது பேரிடர் ஏற்பட்டால், பொதுமக்களை காப்பது, மீட்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.
 மேலும், அந்தப் பகுதி பொதுமக்களுக்கு பேரிடர் மீட்புப் பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், வட்டாட்சியர் தியாகராஜன் மற்றும் தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.