முகப்பு
திருவண்ணாமலை

வேட்டவலம் அருகே 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேட்டவலம் அருகே 8 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் சாராய ஊறல்களை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.

Updated On : 8 அக்டோபர் 2018, 9:36 am IST
பகிர்:

வேட்டவலம் அருகே 8 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் சாராய ஊறல்களை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.
 திருவண்ணாமலை மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில், திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் கவிதா, வேட்டவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீஸார் வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை தீவிர சாராய தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 வேட்டவலத்தை அடுத்த நெய்வானத்தம் பகுதியில் ரோந்து சென்றபோது, ஜமீன்கூடலூர் செல்லும் பாதையில் உள்ள ஒரு நிலத்தில் 8 பிளாஸ்டிக் பேரல்களில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 8 பிளாஸ்டிக் பேரல்களிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் சாராய ஊறல்களை போலீஸார் பறிமுதல் செய்து, அழித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து ஊறல்களைப் பதுக்கி வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.