திருவண்ணாமலை

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

DIN

வந்தவாசி அருகே குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வந்தவாசியை அடுத்த மாலையிட்டான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (36). இவர், காஞ்சிபுரத்தில் உள்ள இனிப்பகத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லலிதாதேவி (28). இந்தத் தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
மதுப்பழக்கம் கொண்ட பெருமாள், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதேபோல, வியாழக்கிழமை இரவும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், பெருமாளுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, பெருமாள் வீட்டு தாழ்வார கூரையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT