திருவண்ணாமலை

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

DIN

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள புளிய மரத்தில் வெள்ளிக்கிழமை சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன், திருவண்ணாமலை தாலுகா போலீஸாருக்கு தகவல் அளித்தார். போலீஸார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்கில் சடலமாகத் தொங்கியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT