திருவண்ணாமலை

போளூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் திமுகவினர் வெற்றி

DIN

போளூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தேர்தலில் திமுக நிர்வாகிகள் வெற்றி பெற்றனர்.
போளூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தேர்தல்   நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அம்பிகா, பாக்கியநாதன், முனியப்பன், சரவணன், மனோகரன், சுப்பராயன், சின்னபையன், ஜெயகாந்தி, ராகவன் உள்பட 11 பேர் வெற்றி பெற்றனர்.
இவர்களில் 8 பேர் திமுகவினர், 3 பேர் அதிமுகவினர். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை இரவு சான்றுகளை வழங்கினார்.
திமுகவினர் 8 பேர் வெற்றி பெற்றதால், அந்தக் கட்சியைச் சேர்ந்த போளூர் தொகுதி எம்எல்ஏ கே.வி.சேகரன், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வெற்றி பெற்றோருக்கு மாலை, சால்வை அணிவித்தனர். பின்னர், ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT