திருட்டு, வழிப்பறி சம்பவங்கள்: போலீஸார் விழிப்புணர்வு
திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்து அனக்காவூர் பகுதியில் பொதுமக்களுக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்து அனக்காவூர் பகுதியில் பொதுமக்களுக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அனக்காவூரில் ஆட்டோவில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் உதவி ஆய்வாளர் அலெக்ஸ் பேசியதாவது: கிராம மக்கள் வெளியில் செல்லும்போது, வீட்டைப் பூட்டி சாவியை திருடர்களுக்கு தெரியும் வகையில் வைத்துவிட்டுச் செல்லக்கூடாது.
சந்தேகப்படும்படியான நபர்கள் கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்தால், அவர்களிடம் விசாரிக்க வேண்டும். மேலும், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அறிமுகம் இல்லாத நபர்கள் மூலம் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்துத் தரச் சொல்லக் கூடாது. வங்கியில் பணம் எடுத்தால் விரைவாக வீட்டுக்குச் செல்ல வேண்டும். மோட்டார் சைக்கிளில் டேங்க் கவரில் வைப்பது, பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். இதேபோல, அனக்காவூர் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த செங்காடு, புரிசை, எச்சூர், செய்யாற்றை வென்றான் உள்ளிட்ட பல கிராமங்களில் பொதுமக்களிடையே அனக்காவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அலெக்ஸ் மற்றும் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.