வண்டதோப்பு முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்
போளூரை அடுத்த திருசூர் கிராமத்தில் வண்டதோப்பில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
போளூரை அடுத்த திருசூர் கிராமத்தில் வண்டதோப்பில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வண்டதோப்பு ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் சிதிலமடைந்து இருந்ததால், அந்தப் பகுதி பக்தர்கள், இளைஞர்கள் சேர்ந்து புதிதாக கோயில் கட்டியதுடன், முனீஸ்வரன் சிலை அமைத்தனர். தொடர்ந்து, அண்மையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையொட்டி, பரத நாட்டியம், இன்னிசைக் கச்சேரி நடைபெற்றன. மேலும், கிராம மக்கள் ஊரணி பொங்கலிட்டு வழிபட்டனர். நிகழ்ச்சியில் போளூர், திருசூர், பேட்டை, மாம்பட்டு உள்பட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.