ஆரணியில் கட்டப்பட்ட குப்பைக் கிடங்கை அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை இடித்துத் தள்ளினர்.
ஆரணி நகராட்சி சார்பில் கே.பி.கே.நகரில் மக்கும்-மக்காத குப்பைக் கிடங்கு கட்டப்பட்டு வந்தது. இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதைப் பொருள்படுத்தாத நகராட்சி நிர்வாகம் அங்கு குப்பைக் கிடங்கை கட்டும் பணிகளை தொடக்கியது. மேலும், எதிர்ப்பு கிளம்பியபோது, நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று சமரசம் செய்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அந்தக் குப்பைக் கிடங்கை பொதுமக்கள் இடித்துத் தள்ளினர். இதையடுத்து, நகராட்சி ஆணையர் அசோக்குமார் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.