ஆரணி அருகே தேவிகாபுரம் கிராமத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேவிகாபுரம் கிராமத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் பி.கோபி, முன்னாள் மாநில பிரசார அணிச் செயலர் ஏ.சண்முகராஜ், மாவட்டச் செயலர் கோவிந்தராஜ் மற்றும்
நிர்வாகிகள் எம்.கரிகாலன் , ஜெ.நடேசன், கேசவன், தேவராஜ், பழனிசாமி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.