திருவண்ணாமலை

வாக்காளர் சரிபார்ப்பு நிகழ்ச்சி

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு நிகழ்ச்சி ஆக. 16-ஆம் தேதி முதல் செப். 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: யர்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற மொபைல் செயலி,   N​V​SP ‌p‌o‌r‌t​a‌l (‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n) என்ற இணையதளம், பொது சேவை மையம், வாக்காளர் சேவை மையம் ஆகியவை வாயிலாக வாக்காளர்கள் தங்களது புகைப்படம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை தாங்களே சரிபார்த்து தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம். 
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 1950 என்ற தொலைபேசி எண் வாயிலாக தங்கள் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். 
மேலும், வாக்காளர்கள் தங்களது விவரங்கள் சரியாக உள்ளதை தெரியப்படுத்த கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வங்கி புத்தகம், விவசாய அடையாள அட்டை, மத்திய, மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றின் நகலை சரிபார்ப்பு அலுவலரிடம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார் ஆட்சியர் கந்தசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT