முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில்

Updated On : 13 பிப்ரவரி 2019, 10:17 am IST
பகிர்:

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், துணைத் தலைவர் எம்.சீனுவாசன், இணைச் செயலர் டி.ஏ.எஸ்.முத்து, கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் டி.செந்தில்குமார் வரவேற்றார். 
திருச்சி பிஷப் ஹெப்பர் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை இணைப் பேராசிரியை எம்.எஸ்.மைதிலி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே பேசினார். 
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றுகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ், கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் யு.உதயகுமார், பி.பாலாஜி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.