கீழ்பென்னாத்தூர் அருகே கண் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் கிராமம், கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (70). இவர், அண்மைக் காலமாக கண் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையவில்லையாம். இதனால், மனமுடைந்த அவர், சனிக்கிழமை பூச்சி மருந்து குடித்து, மயங்கிக் கிடந்தாராம். உறவினர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார்.
இகுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீஸôர் வழக்குப் பதிந்து,
விசாரித்து வருகின்றனர்.