தொடர் சொற்பொழிவு நிறைவு
வந்தவாசி சைவ சமயப் பேரவை சார்பில், வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் 3 நாள்களாக நடைபெற்று
வந்தவாசி சைவ சமயப் பேரவை சார்பில், வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் 3 நாள்களாக நடைபெற்று வந்த திருவிளையாடல் புராண தொடர் சொற்பொழிவு நிகழ்வு அண்மையில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கு சைவ சமயப் பேரவை அமைப்பாளர் அ.வே.முனுசாமி தலைமை வகித்தார். பேரவை கௌரவ ஆலோசகர் ஆ.பூங்காவனம் முன்னிலை வகித்தார். புலவர் செங்கழுநீ.சரவணன் சிறப்புரையாற்றினார்.
பேரவை செயற்குழு உறுப்பினர்கள் சு.காளத்தி, செ.வேங்கமுத்து, சாமி.கபிலன், அ.பெ.வெங்கடேசன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.