மார்ச் 1 முதல் 4 வரை இணையதளம் மூலம் மின் கட்டணங்களை செலுத்த முடியாது
விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள்
விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருவண்ணாமலை மின்வாரிய நுகர்வோர்கள் மார்ச் 1 முதல் 4-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று மின் வாரியம் தெரிவித்தது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த நாள்களில் திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் இணையதளம் (ஆன்லைன்) மூலம் மின் கட்டணத்தைச் செலுத்த இயலாது.
இந்தப் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து மார்ச் 5-ஆம் தேதி முதல் வழக்கம் போல் இணையதளம் செயல்படும். பின்னர், மின் நுகர்வோர்கள் தங்களது கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.