திருவண்ணாமலை

காதல் ஜோடி விஷம் குடிப்பு: காதலி சாவு

DIN


வந்தவாசி அருகே காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலி உயிரிழந்தார். காதலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளம் பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜும் (20) கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனராம்.
இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்ததால், வேதனையடைந்த இருவரும் அந்தக் கிராமத்தில் உள்ள புளியந்தோப்பில் திங்கள்கிழமை விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தனர்.
இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இளம் பெண் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 
கோவிந்தராஜ் தீவிரச் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT