திருவண்ணாமலை

திருக்குறள் தொண்டு மையம்  சார்பில் பொங்கல் விழா

DIN

திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், புதன்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தொண்டு மைய அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தொண்டு மையச் செயலர் சண்முகம் தலைமை வகித்தார். துணைச் செயலர் அசோக்குமார்,  செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் வரவேற்றார். தொண்டு மையம் சார்பில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளி கோபாலகிருஷ்ணனுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டு, அனைவரும் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் தொண்டு மைய நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT