குத்துச்சண்டைப் போட்டி: கஸ்தம்பாடி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
கேரளத்தில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
கேரளத்தில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
4-ஆவது தென்னிந்திய மூவே தாய் சாம்பியனுக்கான குத்துச்சண்டை போட்டி கேரள மாநிலம், கொச்சின் நகரில் 3 நாள்கள் நடைபெற்றது.
இதில், ஜூனியர் பிரிவில் 52 கிலோ எடை பிரிவு போட்டியில் கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர் பி.எஸ்.ஹரிகேசவ், 50 கிலோ எடை பிரிவில் பி.சஞ்சய், 23 கிலோ எடை பிரிவில் 5-ஆம் வகுப்பு மாணவர் இ.யோகேஷ் ஆகிய 3 பேரும் தங்கப் பதக்கத்தையும், 40 கிலோ எடைப் பிரிவில் 8-ஆம் வகுப்பு மாணவர்களான ஏ.திவாகர், வி.ஜெய்ஆகாஷ் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் கூடுதல் தாளாளர் ஆர்.சித்ரா, கல்வியியல் ஆலோசகர் காசிசங்கரேஸ்வரி, பள்ளி முதல்வர் ஜான்மர்லின்இன்பகுமார், பயிற்சியாளர் ஜெ.மதன்தனசேகர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.