திருவண்ணாமலை

அரசுக் கல்லூரியில் மகளிர் மேம்பாடு பயிலரங்கம்

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், மகளிர் மேம்பாடு ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், மகளிர் மேம்பாடு ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு பேராசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பெ.தேவி வரவேற்றார். அரிமா சங்க மாவட்டத் தலைவர் ப.நடராஜன், பேராசிரியர்கள் எஸ்.துரைராஜ், வி.கங்காதேவி, சி.டி.ரவிச்சந்திரன், எம்.குமார், தி.கோ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஏ.சி.ஷர்மிளா, சரியான விகிதாசார உணவுமுறை, காலம் தவறாது உண்ணும் முறை, உடல் நலன் பேணல், ரத்த தானம் குறித்த தவறான கருத்தை போக்குதல், மாதவிடாய் காலங்களில் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள், ரத்த விருத்தி செய்ய உட்கொள்ள வேண்டிய உணவுகள், உடல் ஆரோக்கியத்துக்கான வழிமுறைகள் குறித்து மாணவிகளிடையே எடுத்துரைத்தார். மேலும், மாணவிகள் எழுப்பிய உடல் ரீதியான, மன ரீதியான சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT