திருவண்ணாமலை

வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

DIN

தண்டராம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
 தானிப்பாடி பகுதி வன அலுவலர் பாலு தலைமையிலான வனத்துறையினர் தண்டராம்பட்டை அடுத்த பெருங்குளத்தூர் காட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, காட்டில் சந்தேகப்படும்படி பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
 விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம், சவரியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ்(29), அமலதாஸ் (29), மரியா செல்வம் (28) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.
 இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT