திருவண்ணாமலை

மாவட்ட யோகா, கராத்தே போட்டி: ஆரணி பிங்க்ஸ் பள்ளி சாதனை

DIN

மாவட்ட அளவிலான யோகா, கராத்தே போட்டிகளில் ஆரணி பிங்க்ஸ்   பப்ளிக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.
சென்னை மேல்அயனம்பாக்கத்தில் இந்திய வீரக்கலை பயிற்சிக் கூடம் சார்பில், மாவட்ட அளவிலான யோகா, கராத்தே போட்டிகள் நடைபெற்றன. யோகா போட்டியில் பிங்க்ஸ் பப்ளிக் மெட்ரிக் பள்ளி சார்பில் 24 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில், 4-ஆம் வகுப்பு பயிலும் புனிதா, நவீன்நாராயணன், 3-ஆம் வகுப்பு பயிலும் தனு ஆகியோர் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றனர். 8-ஆம் வகுப்பு பயிலும் திவாகர், கோகுல்நாத், 5-ஆம் வகுப்பு பயிலும் மோகனவிஷ்ணு, கோவர்தன் ஆகியோர் 2-ஆவது இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றனர். மேலும், 8 மாணவர்கள் 3-ஆவது இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
கராத்தே போட்டியில் 10 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 5 மாணவர்கள் இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தையும், 5 மாணவர்கள் 3-ஆவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். யோகா, கராத்தே போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் கூடுதல் தாளாளர் சித்ரா, நிர்வாகி கவிதா, பள்ளி முதல்வர் ஜான்மர்லின்குமார் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT