திருவண்ணாமலை

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு

DIN

வந்தவாசி அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பன் (75). இவரது மனைவி அம்மாச்சி (70). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில், அம்மாச்சி முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக கீழ்நமண்டி கிராமத்தில் வசிக்கும் இளைய மருமகன் ரத்தினத்துடன் மொபெட்டில் சி.ம.புதூரில் உள்ள வங்கிக்கு புதன்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் அம்மாச்சி மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அம்மாச்சி இறந்தார். இதுகுறித்து சுப்பன் அளித்த புகாரின்பேரில், தெள்ளாறு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT