தண்டராம்பட்டு அருகே தண்ணீர் தேடி வந்தபோது வீட்டுக்குள் புகுந்த புள்ளிமானை வனத் துறையினர் மீட்டு, காட்டில் விட்டனர்.
தண்டராம்பட்டை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தராஜன். கோவிந்தராஜன் வீட்டுக்குள் சனிக்கிழமை அதிகாலை புள்ளிமான் ஒன்று புகுந்தது. இதைக் கவனித்த அவர், உடனடியாக மானை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார். இதுகுறித்து வனத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனக் காப்பாளர் சீனிவாசன் தலைமையிலான வனத் துறையினர் வந்து புள்ளிமானை மீட்டு, தண்டராம்பட்டு காப்புக் காட்டில் விட்டனர். காட்டுப் பகுதியில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் தேடி புள்ளிமான் வீட்டுக்குள் வந்துள்ளது.