திருவண்ணாமலை

வீட்டுக்குள் புகுந்த மான் மீட்பு

DIN


தண்டராம்பட்டு அருகே தண்ணீர் தேடி வந்தபோது வீட்டுக்குள் புகுந்த புள்ளிமானை வனத் துறையினர் மீட்டு, காட்டில் விட்டனர்.
தண்டராம்பட்டை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தராஜன். கோவிந்தராஜன் வீட்டுக்குள் சனிக்கிழமை அதிகாலை புள்ளிமான் ஒன்று புகுந்தது. இதைக் கவனித்த அவர், உடனடியாக மானை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார். இதுகுறித்து வனத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனக் காப்பாளர் சீனிவாசன் தலைமையிலான வனத் துறையினர் வந்து புள்ளிமானை மீட்டு, தண்டராம்பட்டு காப்புக் காட்டில் விட்டனர். காட்டுப் பகுதியில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் தேடி புள்ளிமான் வீட்டுக்குள் வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT