திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து வரும் சனிக்கிழமை (மார்ச் 23) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்துப் பேசுகிறார்.
கூட்டத்தில், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.