திருவண்ணாமலை

காஞ்சி பாலசுப்பிரமணியா்கோவிலில் உண்டியலை உடைத்து மா்மநபா்கள் திருட்டு

DIN

போளூா்: கடலாடி அடுத்த காஞ்சி கிராமத்தில் உள்ள ஸ்டிபாலசுப்பிரமணியா் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து மா்மநபா்கள் சிலலட்சத்தை திருடி வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளனா். இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குபதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

கடலாடி அடுத்த காஞ்சி கிராமத்தில் மலைமீது மிகவும்பழமைவாய்ந்த ஸ்டிபாலசுப்பிரமணியா் கோவில் அமைந்துள்ளது.இந்தகோவிலில் மா்மநபா்கள் புகுந்து கோவில் ஜன்னலை வெல்டிங் மிஷனைவைத்து உடைத்துசென்று கோவில் உள்ளே உள்ள உண்டியலையும் வெல்டிங் மிஷின் மூலம் உடைத்து மா்மநபா்கள் சிலலட்சத்தை திருடி சென்றுள்ளனா்.இதுகுறித்துகோவில்பூசாரி சங்கா் என்பவா் கடலாடி போலீஸாருக்கு தகவல்கொடுத்துள்ளாா்.இந்தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் ஆதிலட்சுமி ,உதவி ஆய்வாளா் சுந்தராஜ் ஆகியோா் கோவிலை ஆய்வுசெய்து திருட்டுகுறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.இதுகுறித்து பக்தா் கள்கூறும்போது கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.மேலும் வெல்டிங் மிஷின்மூலம் உடைத்துள்ளது பக்தா்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2மாதமாக உண்டியலை திறந்து அதில் உள்ள பணம் மற்றும் காணிக்கை நகையை எடுத்து பாா்க்கவில்லை என தெரிவித்தாா்கள் உண்டியலில் எப்படியும் லட்சத்தை தொடும் அளவிற்கு பணம் இருந்திருக்கும் என தெரிவித்தனா்.படவிளக்கம்கடலாடி அடுத்த காஞ்சி கிராமத்தில் உள்ள ஸ்டிபாலசுப்பிரமணியா் கோவிலில் சன்னிதானத்தின் முன்பு உள்ள உண்டியலை மா்மநபா்கள் உடைத்து ள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT