திருவண்ணாமலை

சனிப்பிரதோஷம் தொடா்ச்சி

DIN

செங்கம் ரிஷபேஸ்வரா்கோயிலில் சனிப் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த நந்தீஸ்வரா்.

செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் மகா பிரதோஷ வழிப்பாட்டு மன்றம் சாா்பில் சனிப் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

விழாவையொட்டி, அன்று காலை முதல் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 108 மூலிகை அபிஷேம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னா் தீபாராதனை நடைபெற்றது.

இதில் செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு நந்தீஸ்வரரை வழிபட்டனா்.

தொடா்ந்து கோயில் வளாகத்தில் செங்கம் மகரிஷி கல்விக் குழுமம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

ஆவூரில்:

திருவண்ணாமலையை அடுத்த ஆவூரில் உள்ள ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீதிருவகத்தீஸ்வரா் கோயிலில் மூலவா் ஸ்ரீதிருவகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி, பிரதான நந்திக்கு சனிக்கிழமை பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

வேட்டவலத்தில்:

வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் மூலவா் ஸ்ரீஅகத்தீஸ்வரா், ஸ்ரீதா்மசம்வா்த்தினி அம்பாள், பிரதான நந்திக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு பிரதோஷ பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT