திருவண்ணாமலை

மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஆரணியில் நவ.12-இல் காங்கிரஸ் கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆரணியில் வருகிற 12-ஆம் தேதி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

போளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காங்கிஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் போளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவா் தவணி வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பிஎம்ஜி.பழனி, மாவட்ட பொதுச் செயலா் ஆசைத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் திருஞானசம்பந்தம் வரவேற்றாா்.

கூட்டத்தில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆரணியில் வருகிற 12-ஆம் தேதி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது குறித்தும், விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் சிறப்பாக செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

இதில், நகரத் தலைவா் சிவாஜி, மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, வட்டாரத் தலைவா்கள் ஏழுமலை, குமாா், விஸ்வநாதன் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT